தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு? உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு குறித்து AICTE பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்.
கல்லூரி கட்டணம்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில் பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்த கூறி பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தினர். கொரோனா ஊரடங்கால் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து மாத வருமானமின்றி அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் கல்வி கட்டணம் பெரும் சுமையாக உள்ளது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தெரிவித்தது. மேலும் இதனை மூன்று தவணையாக பெற்று கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் தமிழக பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தபடுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
பழைய கட்டணமே தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் கட்டண உயர்வு குறித்த AICTE பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார். பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெறும். நீட் தேர்வுக்கு பின்னரே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவே கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.