தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு திறப்பதற்கான தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து நடப்பு கல்வியாண்டும் கடந்த செப்டம்பர் முதல் தான் பள்ளிகள் தொடங்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டது. அத்துடன் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன
Exams Daily Mobile App Download
மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டாயமான முறையில் இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனால் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று வாரத்தில் 6 நாட்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. இது மாணவர்களுக்கு கூடுதலான மனச்சுமையாக இருந்தது. அதனால் இதனை தவிர்க்க நடப்பு கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவதற்கான தேதி குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களுக்கு தடை நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
இவர் கூறியதாவது, அடுத்த வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்றும் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகள் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தை சென்னை டிஜிபி வளாகத்தில் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.