தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி அரசு பொது விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

0
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி அரசு பொது விடுமுறை - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி அரசு பொது விடுமுறை - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி அரசு பொது விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 648 நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொது விடுமுறை:

தமிழகத்தில் உருமாறிய புதிய வைரஸ் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் , மீண்டும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மையில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து விட்டதாகவும் அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இந்த வார்டுகளில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என ஜனவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தல் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நாள் அன்று, காலை 7 முதல் மாலை 5 மணி வரையில் வாக்கு பதிவு நடைபெறும். மேலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இந்த வகையில் 19ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இருப்பினும் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததால், தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் 33 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து 12 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நாளன்று பொது விடுமுறை கிடையாது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!