தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்து கடந்த நவம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
நீதிமன்றம் உத்தரவு:
திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட விவசாயிகளின் பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த நவம்பர் 1 ஆம் தேதி விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணைய வெளியிடப்பட்டது. இது அரசுக்கு கூடுதல் சுமையாகவே அமையும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு வங்கி இல்லாததால், பலர் பொதுத்துறை வங்கிகளிலேயே தங்களது நகையை அடகு வைத்துள்ளனர். மேலும் கூட்டுறவுத்துறை முறைகேடுகள் தொடர்பாக ஏராளமான புகார்களும் உள்ளன. எனவே, 5 பவுன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 19ம் தேதி அரசு பொது விடுமுறை – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
இந்த மனுவை மதுரை உயர் நீதிமன்றம் ஏற்குமா அல்லது தள்ளுபடி செய்யுமா என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்த நிலையில் இன்று அதற்கான பதில் கிடைத்துள்ளது. இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று நேற்று பிப்ரவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் கூடிய விரைவில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அரசாணையை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.