தமிழகத்தில் நாளை (பிப்.19) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – வாக்காளர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் வெளியானது. தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
மேலும் தேர்தல் நடைபெறும் பகுதிகளின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள மது கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி விடுப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC மூலம் இனி இந்த பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு – உயர்கல்வித்துறை முக்கிய முடிவு!
அதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி வாக்கு அளிக்கும் வகையில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை தினத்தில் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சி 489 பேரூராட்சிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.