TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டாயமான முறையில் தங்கள் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று அண்மையில் TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஆதார் இணைப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப TNPSC போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் காலிப்பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள். குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு TNPSC தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் TNPSCயின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!
அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதமும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர். TNPSCயின் தேர்வுகளை நேர்மையாக நடத்த வேண்டும் என்று பல்வேறு புதிய அறிவிப்புகளை தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக வெளிமாநிலத்தவர்களுக்கு குறைவான பணியிடங்களில் வாய்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ் மொழி தகுதி தேர்வை அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
இதனை தொடர்ந்து மேலும் ஒரு புதிய அறிவிப்பை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளை நேர்மையாக நடத்த பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNPSC தேர்வாணைய இணையதளத்தில் ஒரு முறை நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் விவரங்களை வருகிற 28ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக மேலும் சில கூடுதல் தகவல்களை அல்லது [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.