SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – FD வட்டி விகிதம் உயர்வு!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் பொதுமக்கள் தங்களின் சேமிப்பு பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து சேமிப்பு கணக்குகளிலும் தற்போது பெரும்பாலானோர் சேமித்து வருகின்றனர். மேலும் பணவீக்கம் அதிகரித்து உள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பு!
மேலும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் வங்கிகள் கூடுதல் வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். அதனால் இந்த வட்டி சுமையை தங்கள் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்தும், அதாவது வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படும். அதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு EMI கட்டணம் உயரும். அதனால் தற்போது பல்வேறு வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, தற்போது 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான எஃப்டிகளுக்கு 5.10 சதவீத வட்டி விகிதம் உள்ளது. அத்துடன் 2 முதல் 3 வருடங்களுக்கு வட்டி விகிதம் 5.10%யிலிருந்து 5.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 முதல் 5 ஆண்டு வரையிலான FD திட்டத்திற்கு 5.45% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் 5 முதல் 10 வருடங்களுக்கு வட்டி விகிதம் 5.40 ல் இருந்து 5.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக பணத்தை முதலீடு செய்த குறைந்த நாட்களில் அதிகமான சேமிப்பு தொகையை பெற முடியும். அதனால் SBI வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.