தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு – தலைமை செயலாளர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளை நன்கு தூய்மைபடுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மே 2ம் தேதி 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
ஜூன் 24 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!
அதே போல 10,11,12ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு 1 – 9ம் வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். வர்ணம் பூசுதல் , மைதானங்களை தூய்மைப்படுத்துதல் குப்பைகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் ஆய்வகங்களில் தேவையான பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து இந்த பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை மிகவும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.