தமிழகத்தில் முழு ஊரடங்கிலும் பூச்சி மருந்து கடைகள் திறப்பு – பயன்பெறும் விவசாயிகள்!!
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் ஊரடங்கின் பொழுது பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
பூச்சி மருந்து கடைகள்:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தீவிரம் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வந்த நிலையில் மக்களை தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் சில தளர்வுகள் அடங்கிய முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை மக்கள் முறையாக பின்பற்றவில்லை. இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய தேவையான மளிகை, காய்கறி கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் அனுமதியுடன் வண்டிகளில் வைத்து காய்கறிகளை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கில் பூச்சி மருந்து கடைகள் தொடக்கத்தில் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை தொடர்ந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் 10 மணி வரை உரம் மற்றும் பூச்சி மருந்துகளை திறக்க அரசு அனுமதியளித்தது.
அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்களுக்கு 10% ஊதியம் அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சுமார் 317 உரம் மற்றும் பயிர்களுக்கான பூச்சி மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நடவடிக்கையினால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பூச்சி மருந்து கடைகள் திறக்கப்பட்டதால் பயிர்களை பூச்சிகள் தாக்காமல் தடுக்க முடியும் என்றும் விவசாயிகள் கூறி வருகின்றனர். மேலும் கடைகளுக்கு செல்லும் பொழுது அங்கு முறையான சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற பல பாதிப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.