அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவியாளர்களுக்கு 10% ஊதியம் அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் சமையல் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு 10% ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் அதிகரிப்பு:
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சமையல் உதவியாளர்கள், உருது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நீண்டகால கோரிக்கைக்கு தற்போது மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் சமையல் உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தையும் 10% அதிகரிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து ராஜஸ்தான் மாநிலத்தின் முதன்மை மற்றும் இடைநிலை பள்ளி ஆசிரியர்களின் துணை தலைவர் விபின் சர்மா கூறுகையில், ‘அரசின் இந்த அறிவிப்பு மூலம் லட்சக்கணக்கான அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பயனடைவார்கள்’ என தெரிவித்துள்ளார். மேலும் மாநில அரசின் அறிவிப்பின்படி சமையல் உதவியாளர்களுக்கு 12,800 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த தொகை அவர்களின் குடும்பங்களுக்கு போதுமானதாக இருக்காது.
தமிழகத்தில் மே 31ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கு நீட்டிப்பு? வல்லுநர்கள் எதிர்பார்ப்பு!
ஏனென்றால் பல பள்ளிகளில் பெண்கள் தான் சமையல் உதவியாளராக இருக்கின்றனர். பல குழந்தைகளின் பசியை போக்கும் இந்த ஊழியர்களுக்கு கூடுதலாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஊழியர்களுக்கு 1,452 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட உள்ளது. இது தவிர அரசு பள்ளிகளில் பணிபுரியும் உருது ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் 9045 முதல் 9950 ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி வரை , எந்த அதிகாரிகளுக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் , பணியாளர்கள் நினைவுக்கு வரவில்லை . கனிவுடன் தனியார் பள்ளி ஆசிரியர்களை நினைவில் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்திற்கும் ஏதேனும் வழி செய்யுங்கள் . நாங்களும் மாணவர்களுக்கு கற்றலோடு சேர்த்த சேவையை தான் செய்து வருகின்றோம் . அனைவரும் வளர்ந்த பள்ளியில் பணிபுரிய வில்லை என்பதை கருத்தில் கொண்டு உதவுமாறு கேட்டு கொள்கிறேன் . நன்றி .
Correct one