தமிழகத்தில் மே 31ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கு நீட்டிப்பு? வல்லுநர்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் தினசரி கொரோனா புதிய பாதிப்புகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வரும் நிலையில், தற்போது அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மே 31ம் தேதிக்கு பின் மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகம் முழுவதும் கடந்த மாத மத்தியில் இருந்தே கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்றார். அதன் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பின்னர் தொடர் ஆலோசனைகளுக்கு பின்னர் ஜூன் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தினசரி காலை 10 மணிவரை காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கம் போலவே காணப்பட்டது. இதன் விளைவாக கொரோனா புதிய பாதிப்புகள், உயிரிழப்புகள் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வந்தது. எனவே முழு ஊரடங்கில் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டது. அதன்படி எவ்வித தளர்வுகளும் இன்றி கடந்த மே 24 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு 1,790 கருப்பு பூஞ்சை மருந்து குப்பிகள் ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்த தீவிர ஊரடங்கில் மருந்தகங்கள் தவிர எவ்வித கடைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ காரணங்கள் இன்றி பொதுமக்கள் தேவையின்றி வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த தீவிர ஊரடங்கு பலன் அளிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பும் சற்று குறைந்து 33 ஆயிரத்திற்கு சென்றுள்ளது. பலி எண்ணிக்கையும் சரிந்து உள்ளது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? விசாரணை ஒத்திவைப்பு!
இதனால் தற்போது அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அரசு மேலும் நீட்டிக்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் கோரி உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் தேவை என பொதுமக்கள் கோரி வருகின்றனர். இது தொடர்பாக அரசு மருத்துவ வல்லுநர்கள், சட்டமன்ற குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளது. அதன் முடிவில் மே 31க்கு பிறகு தளர்வுகளற்ற அல்லது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
Hospital