CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? விசாரணை ஒத்திவைப்பு!
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை, மே 31 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்வுகளை ரத்து செய்வது குறித்த நோட்டீசை நிர்வாகத்துக்கு அனுப்ப மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
CBSE தேர்வு
இம்மாதம் 4 ஆம் தேதி அன்று CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகளை CBSE தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதிகள் நெருங்கி வந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வந்தது. இதனால் CBSE தேர்வுகளை நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டதால், அவற்றை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட CBSE தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய கல்வி அமைச்சருக்கு, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டு CBSE தேர்வுகளை ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும், கொரோனா தொற்று குறைந்த பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித்துறை விளக்கம் அளித்து வந்தது. இந்த நிலையில் CBSE தேர்வை ரத்து செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மே 31 க்கு ஒத்திவைத்துள்ளது.
தமிழக பள்ளிகளில் 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் – மே வரை ஊதிய நீட்டிப்பு!!
இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் மம்தா சர்மா, வழக்கு தொடர்பாக CBSE வாரியத்துக்கு முன்னமே நோட்டீஸ் அனுப்ப தவறியதாக கூறி இந்த வழக்கு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 16 ஆகிய தேதிகளில் CBSE நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையின் படி, CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்பு தேர்வுகளை மட்டும் பின்னர் நடத்துவதாகவும் அறிவித்திருந்தது குறிபிடத்தக்கது.