தமிழக பள்ளிகளில் 5000 ஆசிரியரல்லாத பணியிடங்கள் – மே வரை ஊதிய நீட்டிப்பு!!
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 5000 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான ஊதியம் 2021 ஆம் ஆண்டு மே மாதம்வரை நீடிக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊதிய நீட்டிப்பு அரசாணை:
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 5000க்கு மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அதில் 2999 துப்புரவாளர் பணியிடங்கள், 2001 காவலர் பணியிடங்கள் கால முறை ஊதிய விகிதத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு 01.01.2018 முதல் 31.01.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அவர்களின் 31.01.2020 ஆம் தேதி வரை அவர்களுக்கான தொடர் நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 20.03.2012 ல் தொடங்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் ஆக மொத்தம் 5000 பணியிடங்கள்.
இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை புதிய உச்சம் – பொதுமக்கள் அவதி!!
மேலும் தற்போது பணிபுரிந்து வரும் 778 துப்புரவாளர் மற்றும் 492 இரவுக்காவலர் ஆக மொத்தம் 1270 பணியாளர்கள் மே 2021ம் மாதம் ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பானை வழங்கப்படுகிறது. மேற்படி பணியாளர்களது சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான பட்டியல் உரிய அலுவலர்களால் தாக்கல் செய்யப்படும் போது ஏனைய இனங்களில் அவை சரியாக இருக்கும் நிலையில் அதனை ஏற்று சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.