இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை புதிய உச்சம் – பொதுமக்கள் அவதி!!
இந்தியாவில் இதுவரை கண்டிராத வரலாறு காணாத வகையில் தற்போது ஊரடங்கு காலத்தில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
சமையல் எண்ணெய்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிங்களில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. இந்த கால கட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் இதன் விலை அதிகரித்து வருவதனால் வேலையின்றி தவிக்கும் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது வரலாறு காணாத வகையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் 22 மில்லியன் டன் சமையல் எண்ணெயின் 65% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. அதன்படி மலேசியா, இந்தோனேசியா, அர்ஜெண்டினா, உக்ரைன், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.80 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.180 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இலவச உணவு வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!!
இது தொடர்பாக எண்ணெய் உற்பத்தி சங்கம் சார்பில் கூறியதாவது, கடந்த ஒரு வருடங்களாக வெளிநாடுகளில் சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்து வருவதன் காரணமாகே விலை அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரித்துள்ளது. இந்த வரி குறைக்கப்பட்டால் சமையல் எண்ணெய் விலை குறையும் என்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் அதிக அளவில் கொள்முதல் செய்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.