தமிழகத்திற்கு 1,790 கருப்பு பூஞ்சை மருந்து குப்பிகள் ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் அச்சமடைய செய்யும் வகையில் கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு 1,790 கருப்பு பூஞ்சை மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கருப்பு பூஞ்சை:
நாடு முழுவதும் சுமார் ஒன்றரை வருட காலமாகவே கொரோனா என்னும் கொடிய வகை உயிக்கொல்லி நோய் மக்களை தாக்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களை மேலும் வேதனையடைய செய்யும் வகையில் கடந்த ஒரு மாதமாக கருப்பு பூஞ்சை என்னும் அரிய வகை நோய் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நோயினை குணப்படுத்துவதற்கு ஆம்போடேரிசின்-பி என்னும் மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து குப்பிகள் ஒத்துக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? விசாரணை ஒத்திவைப்பு!
அதன்படி ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் தமிழகத்திற்கு 1,790 குப்பிகளை, மராட்டிய மாநிலத்திற்கு 18,140 குப்பிகள், குஜராத் மாநிலத்திற்கு 17,330 குப்ப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தின் ஒரு குப்பியை ரூ.200க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த மருந்து குப்பி அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களில் வருகிற திங்கள் கிழமை (மே 31) முதல் விற்பனைக்கு வரவுள்ளது.