‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரோஷினி ஹரிப்ரியன் உடன் இணைந்த வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவில் கொள்ளும் விதமாக சில த்ரோ பேக் புகைப்படங்களை நடிகை பரினா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட இவர்கள் இருவரையும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா
தமிழ் சின்னத்திரை தொடர்களிலேயே அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்து வைத்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான சீரியல் என்றால் அது விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் 2 முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தவர்கள் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் பரினா. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினியும், வெண்பாவாக நடிகை பரினாவும் இந்த கதைக்கு முக்கிய பங்கு வகித்து வந்தனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & ஐஸ்வர்யா செய்துள்ள காரியம் – வைரலாகும் வீடியோ!
இப்படி இருக்க நடிகை ரோஷினிக்கு தற்சமயம் திரைப்பட வாய்ப்பு கிட்டி இருக்கும் நிலையில், கடந்த வாரங்களில் அவர் சீரியலை விட்டு விலகினார். அதே போல நடிகை பரினாவும் தனது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். இப்போது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடிகை ரோஷினி மற்றும் வில்லி பரினா இருவரையும் மிஸ் செய்து வரும் ரசிகர்களுக்காக, இவர்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை நடிகை பரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழும் ‘பாரதி கண்ணம்மா’ பரீனா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
அதுவும், நடிகை ரோஷினியின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக பழைய புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட பரினாவுடன் சேர்ந்து அவரது ரசிகர்களும் நடிகை ரோஷினிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் எலியும், பூனையுமாக இருக்கும் இவர்கள் இருவரையும் தற்போது நண்பர்களாக பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரையும் மிஸ் செய்து வருவதாக கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.