‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
“பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக உருமாறியுள்ள நடிகை பரீனா தற்போது தனது கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் அள்ளுகிறது.
“பாரதி கண்ணம்மா” பரீனா
மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்றால் சினிமா துறையில் நுழைந்தாலே போதும், அதுவும் சின்னத்துறையில் தங்களுக்கு என்று ஒரு அடையாளம் ஏற்படுத்தி கொண்டு விட்டால் அடுத்ததாக சினிமாவில் கால் தடம் பதித்து விடலாம். அந்த வகையில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். இதில் நடிக்கும் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் மவுசு உள்ளது. அதில் வில்லியாக நடித்து வரும் நடிகை பரீனாவிற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூறலாம்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” சீரியல் வரை – டாப் கமெண்ட்ஸ்!!
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு சில சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவரது 8 வருட அயராத உழைப்பிற்கு “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரி வர பரீனா பயன்படுத்தி கொண்டார் என்று தான் கூற வேண்டும். அழகான வில்லியாகவும், அதே சமயம் தனது நடிப்பாற்றல் மூலமாக அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக உருமாறியுள்ளார். இந்நிலையில் தான் பரீனா தனது கர்ப்ப செய்தியினை உறுதி செய்தார். இருந்து கூட சீரியலில் நடித்து வரும் பரீனா போட்டோஷூட் நடத்தி அசத்தி வருகிறார்.
குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!
எந்த ஒரு பெண்ணுக்கும் தனது முதன் குழந்தையின் மீது தனிப்பட்ட அன்பு இருக்கும். அந்த சமயத்தில் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் பத்திரமாக வைத்துக் கொள்வர். பரீனாவும் குழந்தை 3 மாதமாக வயிற்றில் இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அழகாக இருக்கும் அந்த புகைப்படத்தினை நடிகை கண்மணி எடுத்துள்ளார் என்று அவருக்கு நன்றி கூறி டேக் செய்துள்ளார் பரீனா. அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ் அள்ளுகிறது.