குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!

0
குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் - இன்றைய எபிசோட்!
குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் - இன்றைய எபிசோட்!
குடும்பத்தினர் தடுத்தும் சந்தியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் சரவணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவை வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என குடும்பத்தினர் எவ்வளவோ தடுக்கின்றனர். ஆனால் சரவணனன் கேட்காமல் அவரை வெளியே அனுப்புகிறார். பின்னர் சந்தியா, சரவணன் மீது உள்ள காதலை வெளிப்படுத்துகிறார்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து சந்தியாவை வெளியே அனுப்ப கூடாது என எவ்வளவோ தடுக்கின்றனர். சரவணனை சந்தியா இங்கேயே இருக்கட்டும் என சொல்லுங்க என மயிலு கேட்க சரவணன் எதுவும் பேசாமல் இருக்கிறார். நீ இப்படி செய்யாதே நீ செய்வதற்கு வாழ்க்கை முழுவதும் கவலைப்படுவ என சரவணனின் அப்பா சொல்கிறார். ஆனால் சரவணன் இங்கே இருந்தால் இவங்க சந்தோசமாக இருக்க மாட்டாங்க என சொல்கிறார்.

உடனே சிவகாமி, நான் சொன்னதுக்காக தான் வீட்டை விட்டு இவளை அனுப்புறியா அப்போ என்னை மன்னித்து விடு என கேட்கிறார். உன் பொண்டாட்டியை இனிமேல் எதுவும் சொல்ல மாட்டேன் என சொல்லி வா சந்தியா என அழைத்து கொண்டு உள்ளே செல்கிறார். உடனே சரவணன் நீங்க சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை இது. இந்த வீட்டிற்கு வந்த நாளில் இருந்து இவங்க சந்தோஷமாகவே இல்லை. இது அவங்க இருக்க வேண்டிய கூடு இல்லை, அவங்க சுதந்திரமாக சந்தோசமாக பறக்க வேண்டும் என சொல்லி வெளியே அழைத்து செல்கிறார்.

ஜெனி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடிக்கும் பாக்கியா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

அனைவரும் வேண்டாம் என கெஞ்ச சரவணன் காதில் வாங்காமல் செல்கிறார். நான் உங்களை போக விடமாட்டேன் என சர்க்கரை அழுக, சந்தியா நான் கிளம்புகிறேன். உன் அண்ணா எல்லாம் நல்லதுக்கு தான் செய்வாரு என சொல்கிறார். சந்தியாவை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து அனுப்புகிறார். யாரும் சொல்லுவதை கேட்காமல் சரவணன் ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார். இருவருக்கும் என்ன பிரச்சனை என தெரியாமல் சிவாகமி இருக்க, பஸ் ஸ்டாப்பில் திருநெல்வேலி பஸ் எப்போ வரும் என கேட்டு காத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு எப்போ பசிக்கும் என தெரிந்திருக்கும் நீங்க ஏன் இப்படி புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார் என தெரியவில்லை நினைக்கிறார்.எல்லாம் பேசியாச்சு இனி மனசில் இருக்கும் காதலை மட்டும் தான் பேசவில்லை என நினைக்கிறார். பின்னர் சந்தியா சரவணன் மீது இல்ல காதலை சொல்கிறார். நீங்க கொஞ்ச நாளாக என்னிடம் சரியாக பேசவில்லை அது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். என் பையில் இருக்கும் சாதாரண பேப்பர் அதை நான் எப்படி பார்க்கிறேன் என நீங்க நினைக்க கூட இல்லை.

தனத்திடம் கண்ணன் பற்றி பேசி கவலைப்படும் லட்சுமி அம்மா, தவறாக நடக்க இருப்பது போல கனவு காணும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அந்த சாதாரண பேப்பர்க்காக நீங்க இப்படி செய்வது பெரிய முடிவு எடுப்பது சரி அல்ல என கேட்கிறார். நான் படிப்பில் ஜெயிச்சுட்டேன் ஆனால் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். என் அன்பையும் காதலையும் எப்படி நான் நிரூபிப்பது என எனக்கு தெரியவில்லை என சொல்கிறார். சந்தியா மீது உள்ள பாசத்தை வெளியே சொல்ல முடியாமல் சரவணன் அழுகிறார். அதை பார்த்து சந்தியா என்ன என கேட்க கண்ணில் தூசி விழுந்துவிட்டது என சொல்ல, சந்தியா அதை எடுத்துவிடுகிறார்.

அப்போது சந்தியா மீது சரவணனுக்கு காதல் வர அதை விலக்கி அதிலிருந்து மனதை மாறி அவரை கட்டாயம் அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். பின்னர் பேருந்து வந்துவிட சரவணனுக்கு சந்தியாவை விட்டு பிரிய போகிறோம் என்ற பதட்டம் வருகிறது. அதன் பின்னர் பேருந்து வந்து நின்று திருநெல்வேலி என நடத்துனர் கத்துகிறார். சந்தியாவும் சரவணனும் பிரிய மனமில்லாமல் இருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!