விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவின் முதல் பதிவு - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவின் முதல் பதிவு - உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழகத்தின் இன்றைய முழு ஊரடங்கையும் மீறிய ஒரு பரபரப்பான விஷயம் உள்ளது என்றால் அது விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஃபினாலே தான். இன்றைய நிகழ்ச்சியின் மூலம் தெரிய வேண்டிய தகவல்கள் நேற்றே இணையதளம் மூலம் தமிழகம் முழுவதும் தெரிந்து விட்டதால் அதை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

பிக் பாஸ் சீசன் 5:

சின்னத்திரையில் உலக நாயகன் கமலுக்கு என்று பல நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக கமல் 50 நிகழ்ச்சியில் கமலுக்கு மரியாதை அளிக்கும் விதமாக பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் உச்சத்திலிருக்கும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனால் உலக நாயகன் கமல் அவர்களே ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியை தொடர்ந்து 5 ஆண்டுகளாக தொகுத்து வழங்குவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்களுக்கு இந்த அரிய விருந்தை அளிக்க காரணமாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இன்று மாலை 6:30 மணிக்கு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோடான ஃபினாலே நடக்க இருக்கிறது. இதில் கடைசியாக இருந்த அமீர், ராஜு, ப்ரியங்கா, பாவணி, நிரூப் போன்ற 5 பேரும் பைனலிஸ்ட்டாக இருந்தனர். இவர்களில் ஒருவர் தான் வெற்றியாளர். நேற்று தனி தனியாக இவர்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி நினைவுகளுக்கான வீடியோக்களை பிக் பாஸ் ஒளிபரப்பினார். அதில், ராஜு வீடியோவை பார்த்து விட்டு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குனராக இருந்த போது பெரிய பெரிய நடிகர்களின் வீடியோக்களை தான் இவ்வாறு செய்து வந்ததாகவும், தற்போது தனக்கு ஒருவர் செய்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

சன் டிவி “ரோஜா” சீரியலில் இருந்து விலகும் ஹீரோயின் பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் நேற்றே இறுதி நாள் ஷூட்டிங் முடிந்து வெற்றியாளர் விவரங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராஜு தான் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிக் கோப்பையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்து ராஜு ஜெயிக்க வேண்டும் என்று நினைத்த அவரது ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ரன்னர் அப் ஆக பிரியங்கா தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!