தமிழகத்தில் சரிந்த காய்கறிகள் விலை – வியாபாரிகள் வேதனை!
தமிழகத்தில் கடந்த வாரம் வரை காய்கறி விலை அதிகமாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து வந்த காய்கறிகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
காய்கறி விலை:
தமிழகத்தில் கோடைகாலம் காரணமாக காய்கறி விலை அதிகரிக்க தொடங்கியது. சில வாரங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 120 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாய் ஆனது. அதனால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று காலை 600 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்துள்ளன.
Exams Daily Mobile App Download
இவ்வளவு காய்கறிகள் வந்து குவித்துள்ள நிலையில் கனமழை காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்க வரவில்லை. அதனால் காய்கறி விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் படி கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ60ல் இருந்து ரூ. 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரூ தக்காளி ரூ. 70ல் இருந்து ரூ. 35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கேரட் விலை ரூ. 60ல் இருந்து ரூ. 25க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக அரசு கலை கல்லூரியில் நேரடி விண்ணப்பங்கள்? வலுக்கும் கோரிக்கை!
அவரைக்காய் விலை ரூ. 60ல் இருந்து ரூ. 25க்கும், வெண்டைக்காய் விலை ரூ. 40ல் இருந்து ரூ. 15க்கும், கத்திரிக்காய் விலை ரூ. 30ல் இருந்து ரூ. 10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கக்காய் விலை ரூ. 70ல் இருந்து ரூ. 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த காய்கறி வியாபாரியின் தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறுகையில், வரத்து அதிகரிப்பு மற்றும் கனமழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக சில்லறை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வராததால் விற்பனை செய்யாமல் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் விற்பனை இல்லாமல் வியாபாரிகள் வேதனையில் இருக்கின்றனர். இந்த மாதம் முழுவதும் காய்கறி விலை குறைவாக தான் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.