தமிழக அரசு கலை கல்லூரியில் நேரடி விண்ணப்பங்கள்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு கலை கல்லூரியில் நேரடி விண்ணப்பங்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு கலை கல்லூரியில் நேரடி விண்ணப்பங்கள்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு கலை கல்லூரியில் நேரடி விண்ணப்பங்கள்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மட்டுமல்லாது நேரடியாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்கள் கோரிக்கை:

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 வெளியான நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதியின் கீழ் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று ( ஜூன் 22) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Exams Daily Mobile App Download

இந்தக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான தேதியை மாற்றம் செய்து, அதாவது ஜூன் 22 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது 21 ஆகும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பி.சி.எம்., டி.என்.சி. போன்ற பிரிவினர்களுக்கும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் 23 இளங்கலை பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அரசு கலைக்கல்லூரிக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயில வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!

மேலும் கோவை அரசு கலைக்கல்லூரியில் 2022–23 ம் கல்வியாண்டில் 1,433 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக நேரடியாக விண்ணப்பம் வழங்கப்படாது என்றும், மாணவர்கள் இணையதளம் மூலம் மட்டுமே (www.tngasa.org, www.tngasa.in ) விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி முதல், ஜூலை 7ம் தேதி வரை மாணவர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் அரசின் இந்த முடிவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு கல்லூரியின் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டும், பேராசிரியர்களிடம் ஆலோசித்தும் பாடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லாத சூழல் உருவாவதாகவும்,எனவே இணையதளம் மட்டுமல்லாது நேரடியாகவும் விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!