மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் – போலி சான்றிதழ் விவகாரம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பை பெற்ற ஊழியர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
போலி சான்றிதழ்:
சமீப காலமாக பணியில் சேருவதற்கு பலர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் செயல் நடந்து வருகிறது. இது மிகவும் சட்ட விரோதமான செயலாகும். இந்த மோசடி செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியர்களை அரசு கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டங்கள் உள்ளது. இருப்பினும், சிலர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவிலில் பணிபுரிந்து வரும் காமாட்சி என்பவர் போலியான சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் நடத்திய விசாரணையில் காமாட்சி உட்பட மூன்று நபர்கள் போலி சான்றிதழ் மூலம் பணியில் உள்ளது தெரிய வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் இவர்கள் மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவில் ஊழியர்களின் சான்றிதழ் குறித்து ஆய்வு செய்வதற்காக விசாரணை குழு அமைக்கப்பட்டு அனைத்து ஊழியர்களின் கல்வி சான்றிதழ்களும் பெறப்பட்டு, அவர்களின் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பள்ளிகள் இது தொடர்பாக அறிக்கையை அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 10 பேருடைய சான்றிதழ் குறித்து சந்தேகம் உள்ளதாகவும், அவர்கள் விளக்கம் அளிக்க ஏந்தியும் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.