சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 5 மாதங்களுக்கு பின்னர் மாதாந்திர பூஜைக்காக இன்று முதல் நடை திறக்கப்பட்டு உள்ள நிலையில், நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
சபரிமலை கோவில்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் விளைவாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதிகம் பரவும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 24 வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – திரிபுரா அரசு அறிவிப்பு!
மேலும் கேரளாவில் ஜிகா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக பக்தர்களுக்கு 5 மாதங்களாக தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஜூலை 21ம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்க இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும், மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதிற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 25 ஆயிரம் பேர் ஐந்து நாள் பூஜைக்காக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.