தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயில் ஆனாலும் பிரச்சனையில்லை – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடம்:
தமிழகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்ததால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கல்வியில் மாணவர்களின் கல்வி நிலை குறித்த அச்சம் நிலவியது. இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் மீண்டும் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
கடந்த வருடம் கொரோனா அச்சறுத்ததால் மாணவர்கள் நலன் கருதி 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு மேற்கொள்ள திட்டமிடுவோர் கவனத்திற்கு – இனி சனிக்கிழமையும் திறந்திருக்கும்!
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பிற்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை, தேர்வின் மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.