வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் – வலுக்கும் கோரிக்கை!!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் - வலுக்கும் கோரிக்கை!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் - வலுக்கும் கோரிக்கை!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் – வலுக்கும் கோரிக்கை!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

நிவாரணத் தொகை:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு 37 லட்சம் பொதுமக்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பிற்கும் ரூ.6000 நிவாரணம் வழங்க இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்க இருப்பதாகவும் அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை காட்டிலும் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்குவதில் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு உடனடியாக இதனை தேசிய பேரிடராக அறிவித்து தேவையான நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!