ATM கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பு!
ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும், அதில் பணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்தாலும் மாதத்தில் முதல் 5 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம். அதன் பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏடிஎம்:
இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குதாரர்களும் அதிக அளவில் ஏடிஎம்மை பயன்படுத்துகின்றனர். கொரோனா தொற்று பரவல் அச்சத்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் வங்கிகள் தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் சேவைகளை அளித்து வருகிறது. மேலும் வங்கிக்கு வருவதை தவிர்த்து ஏடிஎம் மற்றும் இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் வடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வீட்டிலிருந்து ஏடிஎம் கார்டு பெறும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
மேலும் ஏடிஎம்களில் நடைபெறும் பண மோசடிகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஏடிஎம் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி ஒரு மாதத்தில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக ஏடிஎம்.,லில் பணம் எடுக்க முடியும். அதுவும் உங்கள் கணக்கு உள்ள வங்கி ஏடிஎம்களில் எடுத்தல் மட்டுமே இலவசம். 5 முறைக்கு மேல் நீங்கள் பணம் எடுத்தாலும் அதில் பணம் இல்லாத பரிவர்த்தனைகள் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல் – 9 நாட்கள் விடுமுறை, ஜன.3 முதல் மீண்டும் திறப்பு!
மேலும் மெட்ரோ நகரங்களில், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம் அல்லாத வேறு வங்கிகளில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். பிற நகரங்களில் 5 முறை இலவசம். அதன் பிறகு ஒரு முறை பண பரிவர்த்தனை ஏடிஎம் கட்டணமாக 21 ரூபாய் வசூலிக்கப்படும் புதிய விதிமுறை வரும் 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏடிஎம் கட்டணம் குறித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதையடுத்து வங்கிகள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருகின்றன.