தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல் – 9 நாட்கள் விடுமுறை, ஜன.3 முதல் மீண்டும் திறப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பு நிலைக்கு தற்போது திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இவ்வாறு பள்ளிகள் கால தாமதமாக திறக்கப்பட்டதால் முறையாக பாடங்களையும் நடத்த முடியவில்லை.
இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
அதனால் நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 17 முதல் 24 ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்கு விடுமுறை அளிக்கப்படும். நடப்பாண்டில் அரையாண்டு தேர்வு ரத்து என்பதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தை கொண்டாட விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அதனால் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட சங்கங்கள் அனைவரும் இணைந்து பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது, நடப்பாண்டில் வருகிற 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதகாவும் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் கூறியுள்ளார்.