வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

0
வெளிநாட்டிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
வெளிநாட்டிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தற்போது உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று தமிழகத்தை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று பரவல் தற்போது குறைந்துள்ள நிலையில், உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் பாதிப்பு பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து இந்தியா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு ஓமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல் – 9 நாட்கள் விடுமுறை, ஜன.3 முதல் மீண்டும் திறப்பு!

இந்த 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தும் வகையில் அதிக அறிகுறி ஏதும் இன்றி தொற்று பரவியுள்ளதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறதே தவிர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் சர்வதேச பயணிகள் அனைவரும் ஏர் சுவிதா இணையதளத்தில் பயணம் மேற்கொள்வதற்கான 14 நாட்களுக்கான பயண விபரத்தை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 72 மணிநேரத்திற்கு முன் பரிசோதனை மேற்கொண்டு அதில் தொற்று இல்லை என்று முடிவு வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 14 நாட்கள் அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்த வேண்டும். அறிகுறி இருப்பது உறுதியான வெளிநாட்டு பயணிகள் மருத்துவ உதவிக்கு 104 என்ற எண் அல்லது மாநில கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!