1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 10 வரை விடுமுறை நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் அடுத்த 2 வாரங்களுக்கு மூடுவதற்கு மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் மூடல்
தற்போது இலங்கையின் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் முக்கிய நகரங்களிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து அத்தியாவசிய சேவைகள் மட்டுமே ஜூலை 10ம் தேதி வரை செயல்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கையின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள் மட்டுமே ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த நடவடிக்கைகள் தற்போது மேலும், 2 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது பாடசாலைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது குறித்து பாடசாலை அதிபர்களும், மாகாண கல்வி அதிகாரிகளும் தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தி இருக்கிறது. அதே வேளையில் மற்ற இடங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் பள்ளித்தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த ஆண்டு கொரோனா 4வது பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகளால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக கல்வியில் ஏற்படும் இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் 4.2 மில்லியன் குழந்தைகளுக்கு, இந்த பொருளாதார நெருக்கடிகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கல்வித்துறை வருத்தம் தெரிவித்துள்ளது. இது தவிர அந்நாட்டில் தற்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.