மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாட்டில் ஏழை எளிய மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

இந்தியாவில் ஏழை எளிய மாணவர்களுக்கும் கல்வி கிடைத்திட வேண்டுமென அவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக மாணவர்களுக்கு மாநில அரசுகளும், மத்திய அரசும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகின்றன. மேலும் இந்த உதவித்தொகையானது வருவாய் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மத்திய அரசு சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு தகுதி உள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசின் கல்வி உதவித்தொகையானது அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. மேலும், பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டில் பள்ளி படிப்பிற்கான கல்வி உதவித்தொகையை பெற வருகிற செப்.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

இதே போல் பள்ளி மேற்படிப்புக்கு அக்டோபர் 31ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் பள்ளி படிப்பிறகான கல்வி உதவித்தொகையை பெற வருகிற 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கல்வி மேற்படிப்பிற்கு மாணவர்கள் நவம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!