தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு அறிவிப்பு – மின்கட்டணம் செலுத்த அவகாசம்!
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த ஜூன் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளவர்கள், ஜூன் 15 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்திக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்கட்டணம்
மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்துபவர்கள், அவர்களது இதர நிலுவை தொகையை செலுத்துவதற்கு மே 10 முதல் மே 31 வரை கால அவகாசம் உள்ளவர்கள் அந்த கட்டண தொகையை ஜூன் 15 ஆம் தேதிக்குள் கட்டும்படிக்கு கால அவகாசத்தை நீட்டிப்பதாக கடந்த மாதம் 26 ஆம் தேதி அன்று மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். மேலும் மின்நுகர்வோர்கள் மின் துண்டிப்பு, மறு இணைப்புக்கட்டணம் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பு வெளியான போது, தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. பின்னர் ஜூன் 7 ஆம் தேதி வரை இந்த பொது முடக்கமானது திரும்பவும் நீட்டிக்கப்பட்டது. இதனால் மின்கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வருவாய் பிரிவின் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 6 இல் முடிவு – முதல்வர் தகவல்!
அதன் படி தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வழுத்த மின் நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமத்தின் காரணமாக, ஜூன் மாதத்துக்கான கட்டணத்தை PMC எனப்படும் முந்தைய மாத கட்டணத்தின் அளவின் படி வசூலித்து கொள்ளலாம். இந்த நடைமுறை அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கு இறுதி நாள் மே 10 முதல் ஜூன் 7 வரை உள்ளவர்களுக்கு, ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.