முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 6 இல் முடிவு – முதல்வர் தகவல்!
கோவா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஜூன் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் காரணமாக கோவா மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் அங்கு படிப்படியாக நோய் பரவல் குறைந்து வருகிறது. ஜூன் 7ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் குறித்து மாநில அரசு மறு ஆய்வு கூட்டம் நடத்தி ஜூன் 6ம் தேதி அன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவருக்கு திருப்தி அளிக்கின்றதா என்ற கேள்விக்கு, எனது திருப்தியை விட இறப்பு விகிதல் குறைவு மற்றும் பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது என்பதே முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஜூன் 5 முதல் கடைகளை திறக்க அனுமதி – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
மே 9ம் தேதி நிலவரப்படி, ஒரு நாளில் 3,000 பேருக்கு தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது. இறப்பு எண்ணிக்கை 100 என்ற அளவில் இருந்தது. மே 9ம் தேதி அன்று தான் ஊரடங்கு அறிவிப்பு முதலில் அறிவிக்கப்பட்டது. ஜூன் 7ம் தேதிக்கு பிறகும் மக்கள் சமூக இடைவெளி மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.