மத்திய வர்த்தக வட்டார வணிகங்கள் பாதிப்பு – நிபுணர்கள் கருத்து!!
கொரோனா தொற்றினால் அதிகரித்துள்ள வீட்டில் இருந்து பணி செய்யும் முறையினால் மத்திய வர்த்தகம் பாதிக்கப்ட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வணிக பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வந்த காரணத்தால் ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களிலும் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களாக உள்ளது. ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் வேலை நேரம் குறைப்பு – உரிமையாளர்கள் பாதிப்பு!!
மத்திய வர்த்தக வட்டாரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அங்குள்ள வணிகங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு வணிகத்தை மாற்றியமைப்பது அவசியம் என்று நிபுணர்கள் அறிவித்துள்ளனர். அங்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கடைக்காரர்களால் நிர்ணயிக்க முடியவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் தயாரிக்கப்படும் உணவுகள் வீணாகும் நிலை உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் தாக்குப்பிடிக்க நினைக்கும் கடைகள், வணிகத்தை விரிவுபடுத்தத் திட்டமிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மத்திய வர்த்தக வட்டாரத்தைவிட்டு வேறு பகுதிகளில் வணிகத்தைத் தொடர கடைக்காரர்கள் ஆலோசிக்கலாம். வணிகர்கள் ஒன்று கூடி கடை வாடகைகளைைக் குறைப்பது பற்றி கோரிக்கை எழுப்புவதும் உதவியாக அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.