தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் வேலை நேரம் குறைப்பு – உரிமையாளர்கள் பாதிப்பு!!
தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 21 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் புதிய தளர்வாக வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதனால் வணிக நிறுவன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வணிக நிறுவனம்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே அதிக அளவிலான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வு அறிக்கையில் வணிக நிறுவனங்கள் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே நடைமேடை டிக்கெட் விற்பனை – 94% வருவாய் வீழ்ச்சி
அதன்படி கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி தமிழக அரசு அறிவித்த தளர்வுகளில் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவித்த புதிய தளர்வுகளில் வணிக நிறுவனங்களில் வேலை நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வணிக நிறுவன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இது குறித்து உலக உத்யோக் பாரதி மதுரை கிளை தலைவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் 33 சதவீதம் பணியாளர்களுடன் வணிக நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு வணிக நிறுவன வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 1000 சதுரடிக்கு உட்பட்ட ஜவுளி கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.