தமிழக முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டத்திலிருந்து விலக்கு? இயக்குநர் அறிவிப்பு!

0
தமிழக முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டத்திலிருந்து விலக்கு? இயக்குநர் அறிவிப்பு!
தமிழக முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டத்திலிருந்து விலக்கு? இயக்குநர் அறிவிப்பு!
தமிழக முதுகலை ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டத்திலிருந்து விலக்கு? இயக்குநர் அறிவிப்பு!

தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக வட்டார வளமையக் கூட்டம் வருகிற 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதில் முதுகலை ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை SCERT இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

முதுகலை ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. நடப்பு கல்வியாண்டில் தரமான கல்வியை வழங்கிட பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை நீக்க 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக வருகிற 27ம் தேதி அன்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக வட்டார வளமையக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஏதுவாளராக பணியாற்றக்கூடியவர்கள் TNSED / EMIS Link Tree செயலியில் தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பயிற்சிகளை 22ம் தேதி முதல் 23ம் தேதி வரை முடித்திட வேண்டும் என்றும் கூறப்பட்டது. அத்துடன் இப்பயிற்சி சார்பாக ஏற்படும் சந்தேகங்களை 23ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கேட்டறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை (ஆக. 25) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை SCERT இயக்குநர் அனுப்பியுள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் இம்மாதம் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக வட்டார வளமையக் கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!