தமிழகத்தில் நாளை (ஆக.25) மின்தடைக்கான பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின் கோட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் சாலைகள் சீரமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் இது மாதிரியான நலத் திட்ட பணிகளின் போதும் தேவைப்படின் மின் தடை செய்யப்படும்.
இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஆக.25) தென்காசி மாவட்டம் கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் – ஏற்பாடுகள் தீவிரம்!
Exams Daily Mobile App Download
மின்தடை பகுதிகள்:
தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெற்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை மற்றும் தாருகாபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் ஆகியவற்றிலும் மின்தடை ஏற்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்