தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வருவதில் விலக்கு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வருகிற 28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் வருகிற ஜூன் 28ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்றவாறு 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ திருப்பதி சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
அதன்படி வகை 3ல் இடம் பெற்றிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டு இதர மாவட்டங்களில் 30 மற்றும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது. மேலும் ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி பணிக்கு வருவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தமிழகத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் ஜூன் 21ம் தேதி வரை பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் 21.06.2021 முதல் 27.06.2021 வரை அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழுவதுமாக விலக்களித்து ஆணையிடுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.