சென்னை டூ திருப்பதி சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சென்னை முதல் திருப்பதி வரை இயக்கப்படும் தினசரி சிறப்பு ரயில் மீண்டும் துவங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் சேவைகள்
கொரோனா 2 ஆம் அலை எதிரொலியாக கடந்த மே மாத துவக்கத்தில் இருந்து ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது மே மாதம் தமிழகத்தில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கிற்கு முன்னதாகவே, பயணிகள் வருகை குறைபாட்டால் ரயில் சேவைகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வந்தது. அந்த வகையில் சென்னையிலிருந்து, பல்வேறு வழித்தடங்களில் தெற்கு மார்க்கமாக இயக்கப்படும் பல ரயில்கள் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தியாவில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இதனுடன் சில சிறப்பு ரயில்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் வீதமானது தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மீண்டுமாக துவங்கியது. அந்த வகையில் தேஜஸ், அந்தியோதியா உள்ளிட்ட சிறப்பு ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி வரை தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவைகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. அதாவது இருவழி தடங்களிலும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் ஜூன் 26 முதல் துவங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கொச்சுவேலி-இந்தூர், போர்பந்தர்-கொச்சுவேலி உள்ளிட்ட 14 சிறப்பு ரயில்களின் சேவைகளையும் மீண்டும் இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.