உக்ரைனில் MBBS மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வுகள் ரத்து!
உக்ரைன் நாட்டில் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்ற 5 வது மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கட்டாயத் தேர்வை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இதனால் போர் காரணமாக தனது சொந்த நாடுகளுக்கு திரும்பிய மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு ரத்து:
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளுள் ஒன்று உக்ரைன். அதனால் உக்ரைன் நேட்டோவில் உறுப்பு நாடுகளாக இணையக் கூடாது என்று ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து ரஷ்யா நேட்டோவில் இணைய முற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ரஷ்யா தனது ராணுவ பலத்தால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போரில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தொடந்து தற்போது 25 வது நாளாக நடைபெற்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவமும் ஒருவருக்கு ஒருவர் மோதி வருகின்றனர்.
IPL சீசன் 15: RCB ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த 3 வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கிடைக்க வாய்ப்பு?
இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி நாடுகளில் இருந்து உக்ரைன் வந்தவர்கள் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர். உக்ரைனில் வெளி நாடுகளில் இருந்து வந்து மருத்துவம் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது நடைபெற்று வரும் போரால் மாணவர்களும் அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்ற 5 வது மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கட்டாய தேர்வை உக்ரைன் அரசு ரத்து செய்துள்ளது.
அந்நாட்டில் லைசென்ஸ் மற்றும் கேஆர்ஓகே போன்ற தேர்வுகள் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போரினால் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கேஆர்ஓகே-1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், கே ஆர் ஓகே-2 தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகவும் உக்ரைன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனால் உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.