TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை அறிவியல் அலுவலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதற்கான தேதி பற்றி TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதிலும் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – பதிவு செய்ய அவகாசம் நீட்டிக்க கோரிக்கை!
இதே போல் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் போட்டி தேர்வுகளை நம்பக தன்மையுடனும், வெளிப்படை தன்மையுடனும் நடத்தி வருகிறது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து இளநிலை அறிவியல் அலுவலர், நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பதிவுகளுக்கு ஏற்கனவே தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வுக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் முடியும் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களின் பட்டியலை வெளியிடுவதற்கான தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி குறித்து நேற்று TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.