காதலுக்காக குணசேகரனை மீறி விபரீத முடிவை எடுத்த ஆதிரை – எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு ஷாக் ட்விஸ்ட்!
வீட்டின் மூத்த அண்ணன் குணசேகரன் தன் காதலுக்கு சம்மதிக்காததால் ஆதிரை எக்குத்தப்பான ஒரு முடிவை எடுக்கப்போகிறார். அது மொத்த குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த உள்ளது.
எதிர்நீச்சல்:
ஆணாதிக்கம் நிறைந்த ஒரு குடும்பத்தில் மருமகளாகும் ஜனனி எவ்வாறு அந்த குடும்பத்தை திருத்த போராடுகிறாள், அந்த வீட்டில் இருக்கும் பிற பெண்களை எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதை சுவாரசியமாக சொல்லும் தொடர் தான் எதிர்நீச்சல். தற்போது குணசேகரனின் பரம வைரியான SKR தம்பியை குணசேகரனின் தங்கை ஆதிரை விரும்புகிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஜனனி, சக்தி சென்று SKR வீட்டில் பேசினாலும் குணசேகரன் SKR வீடு தேடி வந்து பெண் கேட்க வேண்டும் என்று வேண்டுமென்றே செக் வைக்கிறார். அவரின் இந்த பழி வாங்கும் எண்ணம் வீட்டில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சியை தான் ஏற்படுத்துகிறது. ஆதிரைக்கும் அது நன்றாகவே தெரியும். இந்நிலையில் தன் காதலுக்காக விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார் ஆதிரை.
தன் மொத்த குடும்பத்துக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். மேலும் தன் முடிவு பற்றி கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விடுகிறார். இது தெரிந்து குணசேகரன் இடிந்தே போய் விடுகிறார். SKRன் மொத்த குடும்பத்தையும் அவுமானப்படுத்த எண்ணிய குணசேகரனுக்கு தன் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே என வழக்கம் போல் தன் தம்பிகளிடம் புலம்பி அழுது சிம்பதி ஏற்படுத்துக்கிறார். இது குறித்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் வரும்.