தமிழகத்தில் நீட் தேர்வு ஆய்வு குழு அமைத்தல் – நீதிமன்றத்தில் அரசு பதில்!
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டதில் நீதிமன்றங்களின் உத்தரவு மீறப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத்தேர்வு:
தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஓர் குழு அமைத்து நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டது. தற்போது இந்த குழு தொடர்ச்சியாக கருத்துகளை பெற்று, ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் நாகராஜன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ஆல் இன் ஒன் பண்டில் திட்டம் – முழு விவரம்!!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக பதில் மனுவை சமர்ப்பித்துள்ளது. அந்த மனுவில் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்கள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராயவே ஏ.கே.நாகராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. நீட் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படவில்லை. நீட் பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அரசு முடிவெடுக்காத நிலையில் ஏ.கே.ராஜன் அவர்கள் குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட பா.ஜ.க.,வின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.