திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிரசாத விலை ஏற்றம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் ஜிலேபி, முறுக்கு போன்றவற்றின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாத விலை ஏற்றம்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் பலர் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டின் பணக்கார கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஆய்வு குழு அமைத்தல் – நீதிமன்றத்தில் அரசு பதில்!
கடந்த ஆண்டு நாடு தழுவிய பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத காரணத்தால் வருவாய் குறைந்தது. அதனால் உண்டியல் பணத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்ட காரணத்தினால் நிலைமை சரியானது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பகதர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதனை சரி செய்யும் நோக்கில் தற்போது ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்பட்டு வழங்கப்படும் ஜிலேபி, முறுக்கு ஆகியவை விலை உத்தரத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபியின் விலை 100 ரூபாயாக விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அவை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் திருமலையில் லட்டு பிரசாத மையங்களில் லட்டு விநியோக பணியும் பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.