ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ஆல் இன் ஒன் பண்டில் திட்டம் – முழு விவரம்!!
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் பண்டில் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஆல் இன் ஒன் பண்டில் :
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்த வரையில் வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளையும் ஒரே திட்டத்தில் பெற சிறப்பான ஆபரை அறிமுகம் செய்துள்ளது. ஆல் இன் ஒன் பண்டில் என்ற திட்டம் மூலமாக அனைத்தையும் ஒரே திட்டத்தில் பெற முடியும்.
இந்தியாவில் 22% பள்ளிகளில் மட்டுமே இணையவசதி – ஆய்வு முடிவுகள் வெளியீடு!
இதற்கு முன்பாக நாம் மொபைலுக்கு தனியாகவும், டிடிஹெச்சுக்கு தனியாகவும், பிராண்ட்பேண்டுக்கு தனியாகவும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இனி ஏர்டெல் பிளாக் திட்டத்தின் மூலம் ஒரே திட்டத்தில் இந்த சேவைகள் அனைத்தையும் பெற முடியும். இதன் மூலம் உங்களுக்கு செலவும் குறைவாக இருக்கும். ஏர்டெல்லின் இந்த பிளாக் திட்டம் மாதத்திற்கு 998 ரூபாயில் இருந்து 2,099 ரூபாய் வரையில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
2,099 திட்டம் மூலமாக 3 மொபைல் இணைப்புகள், 1 பைபர் கனெக்ஷனையும் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர 1 டிடிஹெச் கனெக்ஷனையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ.1,349 திட்டத்திலும் 3 மொபைல் இணைப்புகளையும், 1 டிடிஹெச் இணைப்பையும் பெற்றும் கொள்ளலாம். இதே 998 ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 2 மொபைலுக்கும், 1 டிடிஹெச் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோருக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.