தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள பிடிப்பு – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

0

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு சம்பள பிடிப்பு – பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்களின் சம்பளங்களை ஒரே தவணையாக பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்:

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 19 நாட்களாக போராடிய வடமதுரை ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பிற படிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் மருத்துவ விடுப்பு தவிர, பிற விடுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் 19 நாட்களுக்கான சம்பளம் உட்பட்ட அனைத்து படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது அரசுக்கு எதிராக பிப்ரவரி 19 முதல் மார்ச் 8 வரை போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்களை சம்பளம் இல்லா விடுப்பாக அனுமதித்து பணி பதிவேட்டில் பதிவு செய்யவும் வட்டார கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பணிக்குச் சென்றனர். இதில் எந்தவித ஓய்வூதிய பிடித்தவும் செய்யப்படாது என குறிப்பிடப்பட்ட நிலையில் தற்போது சம்பளம் பிடித்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!