ஊழியர்களின் வைப்பு நிதி அமைப்பானது பி எஃப் ஓய்வூதியம் 28.29 லட்சம் செலுத்தினால் மாத ஊதியம் ரூபாய் 35 ஆயிரத்து 594 கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய தொகை
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு பயனாளிகள் இருக்கின்றனர். இந்த அமைப்பின் மூலம் பி எப் கணக்கு வைத்திருப்பவர்களின் மாத சம்பளத்தின் ஒரு பகுதி பிடித்தம் செய்யப்பட்டு எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கப்படுகிறது ஊழியர்கள் தங்களது ஓய்வூதிய காலத்தில் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உயர் பிஎஃப் ஓய்வூதிய நிதிக்கு கூடுதலாக ரூபாய் 28.29 லட்சத்தை செலுத்தினால் மாதம் ரூபாய் 35,594 ஊதியமாக வழங்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் Staff Car Driver வேலை – வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
EPFO நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தற்போது கூறப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கானது ஏப்ரல் இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 2022ல் ஓய்வு பெற்ற மனுதாரருக்கு, அதிக ஓய்வூதியம் பெற, ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஓய்வூதிய நிதிக்கு ரூ.28,29,782 செலுத்துமாறு EPFO உத்தரவிட்டது. இது குறித்து நோட்டீஸும் வழங்கப்பட்டது. இந்த தொகையை செலுத்தினால் மாதம் ரூ.52,361 ஓய்வூதியமாக பெற வேண்டும் என்றும், விகிதாச்சார திட்டத்தின்படி நிர்ணயம் செய்தால் ரூ.31,161 மட்டுமே கிடைக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.