அரசு பள்ளி மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் – ஆசிரியர்களுக்கான பயிற்சி டிச.15 ல் தொடக்கம்!
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆசிரியர்களுக்கான பயிற்சி டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஆசிரியர்களுக்கான பயிற்சி:
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நேரடியாக வகுப்பறைக்கு சென்று கல்வி பயிலும் நிலை இல்லாமல் இருந்தது. ஆன்லைன் கல்வி வாயிலாக ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான திறன்களை கற்பிக்க இயலாத சூழல் உருவானது. இதனால் ஆரம்ப பள்ளி மாணவர்கள் எழுத்துக்கள் மற்றும் எண்களை பற்றிய அடிப்படை கல்வியில் பின்தங்கி இருந்தது கண்டறியப்பட்டது.
உச்சநீதிமன்றத்திற்கான புதிய செயலி அறிமுகம் – இனி ஈஸியா அரசு வழக்குகளை பற்றி அறியலாம்!!
Exams Daily Mobile App Download
இதனை சீராக்கும் விதமாக, 2025ம் ஆண்டிற்குள் 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் சரளமாக வாசிக்கவும், எழுத்துக்களை பற்றிய அறிவை வளர்க்கும் விதமாக தமிழக அரசு 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்தின் பயிற்சி டிசம்பர் 15 முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க இருப்பதாகவும், மாவட்ட அளவிலான தமிழ், கணிதம், ஆங்கிலத்துக்கான பயிற்சி டிசம்பர்.19,20,21 ம் தேதிகளில் நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.