விரைவில் முடிவுக்கு வரும் பிரம்மாண்ட சீரியல் ‘எங்க வீட்டு மீனாட்சி’ – ரசிகர்கள் அதிர்ச்சி!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எங்க வீட்டு மீனாட்சி’ சீரியல், விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எங்க வீட்டு மீனாட்சி:
தமிழ் சின்னத்திரை சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். காலை முதல் மாலை வரை பல முன்னணி தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சீரியல்கள் எடுக்கப்படுவதால் ஏகப்பட்ட செலவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமான செலவில் தொடங்கப்பட்ட சீரியல் தான் ” எங்க வீட்டு மீனாட்சி” இந்த சீரியல் தொடங்கப்பட்டு சில எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி தனமாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் ஒளிபரப்ப தொடங்கியது முதல் கதையில் எந்த சுவாரசியமும் இல்லாமல் சென்றதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் இந்த சீரியலை முடிக்க இந்த சீரியல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வெறும் 119 பிசோடுகளே ஒளிபரப்பாகியுள்ள நிலையில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோபியின் மகன் தான் எழில், உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
இந்த சீரியலில் ஜீவா, ஸ்ரித்தா சிவதாஸ், பூர்ணிமா பாக்யராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர். காரைக்குடி வீடு, கூட்டுக் குடும்பம், படிக்காத ஹீரோ, டீச்சர் ஹீரோயின் என ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதன் பின் சீரியலில் எந்த நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக இல்லை அதனால் தான் சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீரியல் தொடங்கப்பட்டு சில மாதங்களில் முடிந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.