கோபியின் மகன் தான் எழில், உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதில் முதற்கட்டமாக எழில் கோபியின் மகன் என்ற உண்மை ராதிகாவுக்கு தெரியவர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் இருந்து கோபியின் நடவடிக்கை எதுவும் சரியில்லாமல் இருக்கிறது. இதுவரை வீட்டிற்கு பயந்த அவர் தற்போது எந்த பயமும் இல்லாமல் ராதிகா வீட்டில் தங்குகிறார். அதனால் பாக்கியாவிற்கு சந்தேகம் வந்தாலும் கோபி மீது இருக்கும் நம்பிக்கையால் எதுவும் கேட்காமல் இருக்கிறார். இந்நிலையில் சீரியலில் கதை அடுத்த கட்டத்திற்கு நகர இருக்கிறது. தற்போது குடும்பத்தில் செழியன் ஜெனியின் பிரச்சனை பெரிதாக இருக்கிறது.
மது அருந்திவிட்டு விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
செழியன் ஜெனியை பிடிக்காமல் இருக்க, விவாகரத்து வாங்கிடலாம் போல என சொல்கிறார். ஆனால் பாக்கியா விவாகரத்து எல்லாம் சாதாரணமாக இருக்கிறதா என கேட்டு சத்தம் போடுகிறார். பாக்கியாவின் இந்த பேச்சை கேட்டு கோபிக்கு பயம் வருகிறது. ஆனால் ராமமூர்த்தி கோபியை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறார். மறுபக்கம் செல்வி கோபியின் நடவடிக்கை சரி இல்லை என சொல்லி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் பாக்கியா அதை எல்லாம் கேட்டு பயத்தில் இருந்தாலும் செல்வி சொல்வது போல நடக்காது என நினைக்கிறார்.
மேலும் கோபியை பற்றி செல்வி எழிலிடம் சொல்லி இருக்கிறார். அடுத்து எழில் தான் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்கப் போகிறார். அதாவது எழில் தான் கோபியின் மகன் என்ற உண்மை ராதிகாவுக்கு தெரிய போகிறது. அதனால் ராதிகா கோபியிடம் கேட்க அப்போ டீச்சர் தான் உங்களின் மனைவியா என்ற உண்மை தெரிய வருகிறது. அதனால் கதையில் பெரிய திருப்பம் ஒன்று வரப் போகிறது. கோபி ராதிகாவின் திருமணம் நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.