Axis வங்கியில் பட்டதாரி பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரம் இதோ!
ஆக்சிஸ் வங்கியில் வேலையை பாதியிலேயே விட்டு வெளியேறிய பெண்களுக்கு வேலை கொடுக்கும் சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்கள் சுயமாக வாழ்வதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் சாமானியர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். நோய்த் தடுப்பு பணியாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தொழில்கள் சரிவடைய தொடங்கியது. இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதன் விளைவாக பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனையடுத்து அரசு, மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகின்றனர்.
கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி – அதிரடி அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது ஆக்சிஸ் வங்கி பெண்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தவும் சிறப்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது. அதாவது ‘House Work is Work’ என்ற திட்டம் இத்திட்டத்தில் வேலையை விட்டுவிட்டு ஹோம் மேக்கராக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை அளிக்கப்படவுள்ளது. இந்த பணியில் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஊதியமும் வழங்கப்படும் என்று ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்கள் சுயமாக வாழ்வதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை பெற பெண்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆக்சிஸ் பேங்க் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் ஏற்கனவே பணிபுரிந்த வழக்கமான ஆக்சிஸ் பேங்க் ஊழியர்களுக்கு வழங்கப்படும். கம்யூனிகேஷன் ஸ்கில், டீம் வொர்க் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். மொபைல் போன் வைத்திருக்க வேண்டும் என்று வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.